×

முயல்கறி விற்ற ஓட்டலுக்கு அபராதம்

கமுதி, நவ.9: கமுதி பகுதியில் உள்ள ஓட்டல்களில் முயல்கறி சமைத்து விற்கப்படுவதாகவனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட வனஅலுவலர்அருண்குமார் உத்தரவின் பேரில், சாயல்குடி வனச்சரகர் ஆறுமுகம் மற்றும் வனவர்கள் அன்புச்செல்வன், கர்ணன், தினேஷ்குமார் ஆகியோர் கமுதி ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் கண்ணார்பட்டி பகுதியில் உள்ள ஓட்டலில் 2 கிலோ முயல்கறி சமைத்து விற்பனைக்காக வைத்திருந்தனர். ஓட்டல் உரிமையாளர் ஜெயலிங்கேஸ்வரன் என்பவரிடம் விசாரணை செய்து ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இனிமேல் முயல்கறி விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Tags : hotel ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து...